இலங்கை பிரதான செய்திகள்

 முச்சக்கர வண்டியும் உழவு இயந்திரமும் மோதி விபத்து –  பெண்  பலி

அம்பாறை மாவட்டம் காரைதீவு  காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று   முச்சக்கர வண்டியும்  உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில்   குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன்  முச்சக்கர வண்டியில்  பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்த  நிலையில்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசiலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம்  ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த   மீராமுகைதீன்  பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் இறந்த பெண்ணின்  அக்கரைப்பற்றுள்ள  மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ம்பவம் தொடர்பாக  காரைதீவு காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.