இலங்கை பிரதான செய்திகள்

கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் மீசாலையில் மீட்பு

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட  ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான நிலையில்   மீட்க்கப்பட்டுள்ளது.
யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். அதனை அடுத்து வாகன உரிமையாளரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக காணப்பட்ட நிலையில்  மீட்க்கப்பட்டுள்ளது.
வாகனத்தை கடத்தி சென்றவர்கள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டனரா என காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.