Home இலங்கை சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசில்கள்!

சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசில்கள்!

by admin

சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  யோ. இளங்கீரன் தலைமையில் நடைபெற்றது.

 மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை சுற்றாடல் கழகமும்,எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்த இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் வே.குகமூர்த்தியவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாடாசாலை முன்னாள் அதிபர் திருமதி சிவமலர் சுந்தரபாரதி மற்றும் ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம், எதிர்கால சுற்றுச் சூழல் கழகத்தைச் சேர்ந்த ம.சசிகரன், எஸ்.கேதீஸ்வரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More