Home இலங்கை இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்  மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்  மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

by admin

ஈழவர் ஜனநாயக முன்னனி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர்நாயகம் பிரபாகரனின் 3 வயது  குழந்தை  மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை மற்றும்  4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள்  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கும் இன்று (29) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்  மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

கடந்த 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த (ஈரோஸ்) கட்சி காரியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள்  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்  கட்சி ஆதரவாளர் ஒருவருக்கும்  கட்சி செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த (1997-7-17) ம் திகதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளரும் இணைந்து காரியாலயத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர்  , அவரது குடும்பத்தினர்  மற்றும் கட்சி ஆதரவாளா்  மீது குண்டு வீசியும்  வாளால் வெட்டியும் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தில்  கட்சி செயலாளரின் 3 வயது குழந்தையான   கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன் பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் என    4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா்.  மேலும்  யோகநாதன்  என்பவா் ஒரு கையையும் புவிராஜசிங்கம் என்பவா்  இருகைகளையும் இழந்திருந்தனா்.

இதனையடுத்து  தாக்குதலாளிகளான முன்னாள்  காவல்துறை உத்தியோகத்தர் சமீல ரஜீந்தரவும் , கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தியும்    கைது செய்யப்பட்டு  பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்திருந்தனா். இது தொடா்பான வழக்கு   மட்டக்களப்பு மேல் நீதிமன்றில்   கடந்த 25 வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது    குறித்த இருவருக்கும் மனித படுகொலை மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களுக்கு  தலா ஒருவருக்கு 3 இருந்து 5 வரையான குற்றச்சாட்டுக்கு 5 ஆயிரம் ரூபா அபதாரம் 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 6 குற்றச்சாட்டுகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியசிறத் தண்டனையும் முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கு மரணதண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More