Home இலங்கை   திருக்கேதீஸ்வர ஆலய  தேர் திருவிழா.

  திருக்கேதீஸ்வர ஆலய  தேர் திருவிழா.

by admin

 

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை(1) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த  புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை  இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது.பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம் பெற்றது.திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை (1)  தேர் திருவிழா இடம் பெற்றது.
இத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாளை வெள்ளிக்கிழமை ( 2) ஆம் தீர்த்த திருவிழாவில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More