Home இலங்கை XPress Pearl கப்பல் இழப்பீட்டு வழக்கு – சமரசத்திற்காக விசேட குழு

XPress Pearl கப்பல் இழப்பீட்டு வழக்கு – சமரசத்திற்காக விசேட குழு

by admin

 

XPress Pearl  கப்பலால்  நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு   நட்டஈடு பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சமரசத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாட  அமைச்சரவை அனுமதிக்கமைய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று(05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக   தொிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சிங்கப்பூர்  செல்லவுள்ளதுடன், அங்கு கப்பல் நிறுவனம் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ள  இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்திரேலிய சட்ட ஆலோசகர்  ஆகியோா் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More