Home இலங்கை மருந்தங்கேணி காவல்துறையினருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

மருந்தங்கேணி காவல்துறையினருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனா்

by admin

 

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி காவல்துறையினருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம் திகதி மக்கள் சந்திப்பில், ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் காண்பிக்காத ஒருவர், துப்பாகியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக  தொிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்     இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில்   நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்ள மருதங்கேணி காவல்துறையினருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நான்கு காவல்துறையினருக்கு இவ்வாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்  இரண்டு காவல்துறையினர் இன்று தமது காரியாலயத்தில் முன்னிலையாக உள்ளதாக அறியப்படுத்தியுள்ளனர் எனவும் கனகராஜ் தெரிவித்துள்ளாா்..

சாதாரணதரப் பரீட்சைக் கடமைகளின் நிமிர்த்தம், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ள ஏனைய இரு அதிகாரிகளும், பிறிதொரு தினத்தில் முன்னிலையாவதாக அறியப்படுத்தி  உள்ளதாக அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More