வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான ஏனைய தமிழ் அரசியல் கைதிதகளை சந்திக்க மகர சிறைச்சாலைக்கு சென்ற சட்டத்தரணிகள், ஊடகவியலாளர், ஆகியோரை சிறைச்சாலை நிர்வாகத்தினர் சிறைக்குள் தடுத்து வைத்துள்ளனர்.
சிறைக்கைதிகளை சட்டத்தரணிகள் சந்திக்க இருக்கும் உரிமையை மறுத்துள்ள சிறைச்சாலை நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து வைத்துக்கொண்டு, காவற்துறையினரை சிறைச்சாலைக்கு வருமாறு அறிவித்துள்ளனர்.
மஞ்சுள பத்திராஜா, நாமால் ராஜபக்ஷ ( ஜனாதிபதியின் புதல்வர் அல்ல) பிரியரஞ்சன ஜயசிங்க, ஆகிய சட்டத்தரணிகள் இருப்பதாக சட்டத்தரணியும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.