பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப்படும்என இலங்கை அறிவித்துள்ளது.
பலஸ்தீன மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள்கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளது.
பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினைக்கு இதுவரையில் காத்திரமான ஓர்தீர்வுது;திட்டம் முன்வைக்கப்படாமை ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முழு உறுப்புரிமை வழங்கவேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சுயாதீன பலஸ்தீன இராச்சியமொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதேஇலங்கையின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கலந்துகொண்டுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.