இலங்கை இராணுவம் வடக்கில் காணிகளை கொள்ளையிடுவதாக கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (05) கனடாவில் இருந்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
கனடாவின் ஸ்னாபரோவில் உள்ள ஸ்ரீ ஐப்பன் கோயில் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த வேலைத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
வடக்கில் அனைத்து இடங்களிலும் பௌத்த விகாரைகளை அமைப்பதாகவும் முழு வடக்கும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
இலங்கையில் இருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற புலிகளின் ஆதரவாளரான சேரன் ருத்ரமூர்த்தி இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க உள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.