கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 862 ஹெக்டேயர் வயல் முற்றாக அழிந்துள்ளது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்பாசன பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விஹிர்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி விவசாயிகள் உரிய காலத்தில் நெற் செய்கையை மேற்கொண்ட போதிலும், எதிர்பார்த்த மழை கிடைக்காததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட விவசாயிகள் அமைப் கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடும் வறட்சி காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் மழைப்பெய்ய வில்லை. இதனால் இரணைமடு குளம் உள்ளிட்ட பல குளங்கள் வற்றியுள்ளன.