செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வவுனியா சிறைப் புலிகளுக்கு நோர்வே – சுவிஸ் புலிகளும் தப்பிச் சென்ற ஊடகவியலாளர்களும் உதவினர்

 

என்கிறது திவயின

வவுனியா சிறைப்  புலிகளுக்கு நோர்வே – சுவிஸ் புலிகளும் தப்பிச் சென்ற ஊடகவியலாளர்களும் உதவினர்

 

வவுனியா சிறைச்சாலையில் இருந்த புலிகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய புலிப்பயங்கரவாதிகள் நோர்வே மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் செய்மதி தொலைபேசி ஊடாக அடிக்கடி ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

நோர்வேயில் உள்ள புலிகளின் தலைவர் நெடியவனின் இணையத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும் வவுனியா சிறையில் இருந்த இந்த கைதிகளுக்கு உதவியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையில் வவுனியா சிறையில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வரை அவர்கள் தமக்கு தகவல்களை வழங்கியதாக புலிகளின் இணைத்தளங்கள் தெரிவித்துள்ளன.  இதனிடையே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய புலிப்பயங்கரவாதிகளை பார்ப்பதற்காக தமிழ் அரசியல்;வாதிகள் மூன்று பேர் சென்றிருந்தனர் என பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(3) அபிப்பிராயங்கள்
07-07-2012, 17:39
 - Posted by Siva.
அரச மந்திரி பிரதானிகளும், சிறைத் துறையினரும், போதாதென்று இப்பொழுது திவயின பத்திரிகையும் கூட மானம் கெட்டு அறிக்கை விடுகிறது! சிறைக் கைதிகளிடம் பணம், செல்லிட மற்றும் செய்மதித் தொலைபேசிகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றினார்களாம்! நம்பும்படியாகவா இருக்கிறது? சரி! உண்மை என்றே வைத்துக் கொள்வோம்! இவர்களின் பாதுகாப்பையும் மீறி அவை எல்லாம் எப்படிச் சிறை வளாகத்தினுள் கொண்டு வரப்பட்டன? தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே கொண்டு வரப்பட்டன, என்றால் அதற்கு யார் பொறுப்பு? சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இவற்றை உள் அனுமதித்தார்களா? யாரை விசாரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்? தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறையில் கண்டுபிடிக்கப் பட்டன, என்பது அப்பட்டமான பொய்! இவர்களே வைத்து, பின் இவர்களே கண்டு பிடிப்பது என்பதெல்லாம் திட்டமிட்ட சதி நாடகம்! முள்ளி வாய்க்காலில் சரணடைந்தவர்களை, கோத்தாவின் உத்தரவுப் படி, கொன்றொழிக்கத் தவறியவர்கள், சிறையினுள் கொல்கிறார்கள்! மானம் கெட்டுக் கையாலாகத் தனமாகக் கொன்று விட்டு, சொல்லும் பொய்யைக் கூடப் பொருந்தும் படியாகச் சொல்லத் தெரியாமல் மூக்குடைபடும் இவர்களுக்கு, அந்த வயது போன பெற்றோர்களின் துயரம் எங்கே தெரியப் போகிறது? இன்னும் எத்தனை துயரக் கதைகளுக்கு எதிர் காலத்தில் முகம் கொடுக்கப் போகின்றோமோ?
08-07-2012, 06:28
 - Posted by Solomon
இனவா வாத தீவிரவாதிகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். சிறையில் இருந்துகொண்டே சில வானொலிகளுக்கு கைதிகள் பெட்டி கொடுத்தது ஒன்றும் உலகம் அறியாத விடையம் அல்ல. இந்த தவறை நடக்க விட்ட தவறான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தெரியாதா ?. சிறை கைதிகள் அத்துமீறி சிறை காவலர்களை சிறைப்படுத்தும் போது அந்த நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவது வழமை. ஆனால் குளோபல் தமிழ் நியுஸ் இணையத்தில் வந்த உண்மையான நிகழ்வுகளை வாசிக்கும் போது கண்களில் கண்ணீர் பனிப்பதை தவிர்க்க முடியவில்லை. "ஆண்டவன் நின்று அறுப்பான்" என்பது மட்டும் உண்மையே.
08-07-2012, 08:27
 - Posted by Anonymous
அதிகாரிகள் இடம் மாற்றம் இழந்த உயிரை திருப்பி தருமா ????
ஏன் பொய் சொளுகிரிர்கள் ???? வளர்சி அடைந்த நாடுகள் ஏன் இந்தியாவில் கூட மிக சிறப்பாக இந்த நிலைமைகள் கையாளப்படுகின்றன ??????
இலங்கை சிறைகளில் போதை பாவனை இல்லாத சிறை சொல்லுங்கள் ///// சட்ட விரோத பாலியல் இல்லாத சிறை சொல்ல்லுங்கள் ...இதற்க்கு எல்லாம் அனுமதிக்கிற அரசு ..அப்பாவி தமிழ் கைதிகளை கொள்ளுகிறது ....அதற்க்கு உங்கள் மாதிரி ஆட்கள் வக்காலத்து ????
சம்பவம் நட்டந்து இது வரை அரசு பதில் அள்ளிக மறுத்து விட்டது >>>>>நீதி அமைச்சர் வாய் திறக்கவில்லை ???? பதவிக்களுக்காக காட்டி கொடுக்கும் இந்த வேலையே தேவை இல்லை
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.