செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஒன்பது இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன

 

ஒன்பது இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன

 

 
ஊடக அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய ஒன்பது இணைய தளங்களை இலங்கை தொலைதொடர்பு
கட்டுப்பாட்டு ஆணையகம் முடக்கியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் வெளியிட்டு  வந்த இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இணைய தளங்கள் முடக்கப்படவில்லை எனவும், தற்காலிக அடிப்படையில் குறித்த இணைய தளங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்குனர்களிடம் கோரியதாகவும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் யூ.எச்.சீ. பிரியந்த தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த இணைய தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்ட போதிலும் வெளிநாடுகளில் பார்வையிடக் கூடிய வசதிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில இணைய தளங்களில் அதன் உரிமையாளர் பெயரோ தொடர்பு கொள்ளக்கூடிய விபரங்களோ கிடையாது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
09-07-2012, 10:36
 - Posted by Siva.
நிலவுக்குப் பயந்து பரதேசம் போக எண்ணிய மூடனின் கதையை ஒத்தது, இவர்களின் கதை! தனிப்பட்ட அவதூறுகள் இருந்தால், சட்டரீதியில் அணுகி, கோடிக்கணக்கில் மான நஷ்டமே பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவே! இங்கு முடக்கப்பட்ட ஒன்பது இணையத் தளங்களுக்குமா, அவற்றின் உரிமையாளர் பெயரோ தொடர்பு கொள்ளக்கூடிய விபரங்களோ இல்லை? மொத்தத்தில், தகவல் அறியும் இந்த உரிமையைத் தடுப்பதும், ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலாகவே பார்க்கப்பட வேண்டும்!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.