விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்கட்சிகள் இணைந்து போட்டியிடக் கூடாது – ACMC

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்கட்சிகள் இணைந்து போட்டியிடக் கூடாது – ACMC

 

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்கட்சிகள் இணைந்து போட்டியிடக் கூடாது என அகில இலங்கை முஸ்லிம் காங்கரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
 
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் இணைந்து போட்டியிடக் கூடாது என அகில இலங்கைமுஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.அஷ்ரப் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடமாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முஸ்லிம் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது னஎ அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் கூட்டணி சேரும் கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏதேனும் இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அவ்வாறு இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக ;கொள்ளப்பட்டிருந்தால் அது முஸ்லிம் மக்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது எனவும், அது வெறும் அரசியல்வாதிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் எனவும் ஹமீட் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(10) அபிப்பிராயங்கள்
10-07-2012, 10:15
 - Posted by Anonymous
அவர்களும் கூட்டமைப்போடு பேச்சு வார்தை நடத்த மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் எது செய்தாலும் அதை ACMC யினர் எதிர்க்கத்தான் செய்வார்கள்.
10-07-2012, 14:56
 - Posted by கல்கி
கடவுளே !
என்ன தான் அரசியல் தேவையிருந்தாலும்... சோனகரோட சேரக் கூடாது....

" கெட்ட நண்பனை விட மோசமான எதிரி பரவாயில்லை...."
அறிஞர் கல்கி
10-07-2012, 16:46
 - Posted by Siva.
இன்று உயிரோடு இல்லாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.அஷ்ரப்பினால் தேர்தல்களில் போட்டியிட முடியாதென்பது எல்லோருக்கும் தெரியும்! ஆனால், அவர் நம்பிக் கூட்டு வைத்தவர்களாலேயே கொல்லப்பட்டார் என்பதை எப்படிச் சுலபமாக இந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் மறந்தாரோ, தெரியவில்லை! அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், சில சமயம் தனியாக முஸ்லிம்களுக்காகக் கட்சி ஆரம்பித்ததை எண்ணிக் கண்ணீர் விட்டிருப்பாரோ, என்னவோ? அவ்வளவுக்கு, இன்று முஸ்லிம்களிடையே பல போட்டிக் கட்சிகள் தோன்றித் தம் தனித் தன்மையை இழந்து, பதவிக்காக அரச தலைமைகளின் காலில் மிதிபட்டுத் தவிக்கிறார்கள்! உதாரணத்துக்கு, இன்று அரசில் இணைந்து நீதி அமைச்சுப் பொறுப்பேற்ற திரு அஷ்ரப் அவர்கள், தான் அரசில் இணைந்தமைக்காக அன்று கூறிய காரணம், சிரிப்புக் கிடமானது. கிழக்கில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கக் கை கொடுக்கும்படி கேட்கும், த. தே. கூவினருடன், எவ்வாறான இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்த முடியுமென்று இந்தச் சந்தேகப் பிராணி கருதுகிறதோ, தெரியவில்லை?
10-07-2012, 19:57
 - Posted by Solomon
//அவர் நம்பிக் கூட்டு வைத்தவர்களாலேயே கொல்லப்பட்டார் என்பதை எப்படிச் சுலபமாக இந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் மறந்தாரோ, //

தலைவர் அஷ்ரபை கொன்றது புலிகளை தற்கொலைதாரி என்பதனை மறந்து விடீர்களா அல்லது வழமைபோல் "ஐயோ புலிகள் அப்பாவிகள் " என்று உண்மை மறைக்க முயல்கிறீர்களா? அஷரப் அவர்களுடன் வானூர்தியில் சென்ற ஒரே ஒரு தமிழர் , பின்னாளில் "மாவீரராக " மரியாததை படுத்தப்பட்ட சரித்திரம் மறக்க மாட்டோம். அவரை புலிகள் கொல்லாமல் இருந்திருந்தால் "தென்கிழக்கு பல்கலை கழகம்" , சம்மாந்துறை தொழில் நுட்ப கலூரி " ஒலிவில் மீன்பிடி துறை முகம்" போல் இன்னமும் எத்தனயோ முஸ்லிம்களுக்கு அண்மைய பயக்க கூடிய செயல் திட்டங்களை செய்திருப்பார். அவர் மீது எத்தனை தடைவைகள் புலிகள் கொலை முயற்சி செய்தார்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள். அவர் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரசு இப்போது ரவ்ப் ஹகீம் கையில் பொய் சேர்ந்ததுதா அந்த கட்சிக்கு வந்த நாசம்.

கல்கி, நீங்கள் சொல்வதற்க்கு முன்பே புலிகள் செய்தும் காட்டிவிடார்கள்.
10-07-2012, 20:26
 - Posted by Anonymous
ஆதாரமில்லாமல் பேசுவது தானே உங்கள் பிழைப்பு .....
அஸ்ரப் கொலை புலிகள் செய்தார்களா ????? எங்கே அந்த மாவீரர் ??????..ஆதாரமில்லாமல் கதைப்பது உங்கள் கோமாளித்தனம்
இலங்கை அரச ஆதரவில் பௌசி கொலை செய்தது என ஒரு கூட்டம் திரியுது ...
இயற்கை என இன்னுமொரு கூட்டம் ?????.....எப்படித்தான் உங்களை மாதிரி ஆட்களால் மன சட்சய் இல்லாமல் இப்படி கதைகளை உருவாக்க முடியுதோ ??
இப்ப நீங்கள் இன்னொரு புது வதந்தி ????? ஆயிரம் பிழைய்கள் செய்தலும் உண்மையாக முஸ்லிம்களை நேசித்த தலைவர் அவர் ..உங்களை மாதிரி ஆட்கள் தான் எல்லாத்துக்கும் காரணம்
10-07-2012, 22:11
 - Posted by Anonymous
ஓட்டாமாவடி, அக்கரை பற்று, ஏற்றாவூர், போன்ற பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை கொலை செய்த கொலைகார கூட்டத்துக்கு தலைமை தாங்கியவன் சிதறடிக்கப் பட்டதை நினைத்து நான் பெருமையடைகின்றேன், ராஜன்,
10-07-2012, 22:58
 - Posted by Solomon
// ஆயிரம் பிழைய்கள் செய்தலும் உண்மையாக முஸ்லிம்களை நேசித்த தலைவர்// ஒ அப்பிடியா வட பகுதியில் இருந்த ஒரு முஸ்லிம் கூட உண்மையான முஸ்லிமாக அவருடைய கண்ணுக்கு படவில்லையா ?. சுபஹானல்லா !

தமிழ் பேசும் ஹிந்துக்களையே அவருக்கு பிடிக்கவில்லையாம் பிறகு ஏன் ....அதுசரி மலையாளம் தெரிந்த எம் ஜி ஆர் நன்றாக பிடித்ததில் ஆச்சரியமில்லை தான்.

நங்கள் அறிந்த அந்த புலிகளின் மாவீரர் தகுதி பெற்றவர் தலைவர் அஷ்ரப் கொல்லபடுவதட்க்கு சில வருடங்களுக்கு முன் (காரை தீவு ஊரை சார்ந்தவர்) "புலிகளில் இருந்து பிரிந்து வந்தேன் " என்று ஒட்டிக்கொண்டவர். புலிகளின் நம்பிக்கை துரோக நாடகத்தில் (பிரமே தாச போல் , ராஜீவ் காந்தி போல், அடங்கா தமிழன் அமிர்தலிங்கம் போல் ) பலி எடுக்கப்பட்டார்.

ராஜன் எவ்வளவு சந்தோசமாக ஆமோதிக்கிறார் பார்த்தீர்களா. அவர் விஷயம் தெரிந்தவர்.
10-07-2012, 23:27
 - Posted by Anonymous
நான் பிழைய்கள் செய்தலும் முஸ்லிம்களை நேசித்த தலைவராக சொன்னது அஸ்ரப் அவர்களைத்தான் .....வாசிக்கும் அறிவு பூச்சியமான நீங்கள் தவறாக விளங்கியது உங்கள் தவறு ....எங்கள் தலைவர் காலத்தில் இவர் உண்மையில் ராஜன் சொன்னது போல பல கொலைகளுக்கு உடந்தைய இருந்தார் ..இது பற்றி ஏன் நீங்கள் பேச வில்லை .......பிக்கு சொன்ன கதை தான் நினைவுக்கு வருகிறது ..நீங்கள் மதவாதம் பேசும் போது......
ஆயிரகணக்கான தமிழர்களை கொலை ,கடத்தல் ,கற்பழிப்பு செய்து விட்டு அதை பற்றி எழுதினால் பதில் பேசாமல் வட பகுதி முஸ்லிம்கள் பற்றி மட்டும் திரும்ம திரும்ம பேசுவது ஏன்..ராஜன் அவர்கள் தெளிவாக அதை சொல்லி இருக்கிறார் ....
வட பகுதி முஸ்லிம்கள் மீது ஒட்டு மொத்த நடவடிக்கை தவறுதான் ..இதை புலிகள் ,TNA ஏற்று கொண்டு இருக்கிறார்கள் ..இது வரை சிஹல அரசோடு சேர்ந்து உங்கள் குழுக்கள் செய்த எதாவது விடங்களுக்கு மன்னிப்பு கேட்டிர்களா ???
அஸ்ரப் அவர்களுடன் இறந்த அந்த இடை வயதான காரைதீவு தமிழரை புலியக்குவது உங்கள் அயோக்கியத்தனம் ..எந்த இடத்திலும் இப்படி பொய் சொல்ல படவில்லை ..இலங்கை விமான படை கூட கருப்பு பெட்டி ஆதாரத்தில் விபததாக சொன்னது ....நீங்கள் அறிந்த அந்த மாவீரர் பெயர் என்ன ?????
பௌசி சம்பத்தபட்டதக சொன்ன கதை என்னவாயிற்று ..இதுவரை எல்லாத்துக்கும் புலி கதை சொல்லும் கோமாளி அரசியல் வாதிகள் கூட எந்த கதை சொல்லவில்லை ...
11-07-2012, 11:36
 - Posted by Siva.
சொலமன் ஒரு அரைவேக்காடு என்பதைப் பலமுறை சொல்லிவிட்டேன்! அவர், தன்னை இஸ்லாமிய மக்களின் ஒட்டு மொத்தப் பிரதிநிதி ஆகக் காட்டிக் கொள்ள முனைவது, சிரிப்புக்கிடமானது. சம்பந்தா சம்பந்தமில்லாமல், எந்தத் செய்திகளுக்கு எவர் விமர்சனம் வைத்தாலும், அதில் யாழ் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப் பட்டது பற்றியும், புலித் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியுமே பிரஸ்தாபிப்பார். அது, அவர் குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. தன்னைத் தமிழராகக் காட்டிக் கொள்ள முயலும் இவர், நடந்த தவறுகளை மறந்தோ அன்றி மன்னித்தோ, இன ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் என்றுமே தன் கருத்தை முன்வைத்ததில்லை. இலங்கையில் தமிழர், இரண்டாவது பெரும்பான்மையினர் என்பதையே, எவரும் கருத்தில் எடுப்பார்கள். ஆனால் இவர் மட்டும், ஏற்கெனவே பல முறை, சிறுபான்மைத் தமிழருள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர், என்னும் கருத்தைத் திணிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இன்று, இது ஒரு அவசியமான பிரச்சனையே அல்ல. பல சந்தர்ப்பங்களில், இவர் போன்றவர்களைப் பயன் படுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் செய்ய முனைவதை, இவராகவே செய்கிறார்!. இன்று வரை, ஒரு முறையாவது, இஸ்லாமிய ஊர்காவல் படையினர் செய்த அட்டூழியங்கள் பற்றியோ அன்றி பள்ளிவாசல்களிலும் இந்துக் கோவில்களிலும் நடத்தி முடிக்கப்பட்ட படு கொலைகள் பற்றியோ நான் விமர்சித்ததே கிடையாது! அதே நேரம், அரசியல் ரீதியாகக் கிழக்கு இஸ்லாமியர் தமிழரசுக் கட்சியால் அன்று புறக்கணிக்கப் பட்டதும், இஸ்லாமியரைப் புலிகள் யாழில் இருந்து வெளியேற்றியதும், தவறு என்பதைச் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். D S சேனநாயக்கா காலத்திலிருந்தே, கிழக்கு நிலம் திட்டமிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் பறிக்கப் படுவது தெரிந்திருந்தும், இன்னும் சிங்களத் தலைமைகளுடன் தேர்தல்க் கூட்டுச் சேர எண்ணுவது, கவலைக்குரியது. கிழக்கில் நியாயமான தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், அரசுடன் கூட்டு வைக்கும் இஸ்லாமியக் கட்சிகளை, இஸ்லாமியர்கள் ஆதரிக்க மாட்டார்கள், என்றே நம்புகிறேன். இஸ்லாமியர் சிங்களக் கட்சிகளை ஆதரிப்பது, கிழக்கு நிலத்தைப் பறிகொடுப்பதற்கு ஒப்பானது, என்பதை உணர்வார்கள் என நம்புகிறேன்! அன்று, கல்லோயா அபிவிருத்தித் திட்டம் போல், நாளை இன்னுமொரு அபிவிருத்தித் திட்டத்தை, வேலை வாய்ப்பு, கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வையில், மகிந்த சகோதரர்கள் தமது பெயர்களில் கொண்டு வருவார்கள், என்பது மட்டும் நிட்சயம்! சொலமன் போன்றோர், பிரச்சனைகளைப் பரந்துபட்டுப் பார்ப்பது, தமிழருக்கு நன்மை பயக்கும், என்பதைத் தயவுடன் கூற விரும்புகிறேன். திரு. அஷ்ரப்பை புலிகள்தான் கொன்றார்கள் என்ற இவரின் கருத்து, இவரால் புனையப்பட்டது, என்பதே உண்மை! இது போன்ற ஒரு கருத்தை, இதுவரை, அரசு உட்பட எவருமே முன்வைக்க வில்லை!
11-07-2012, 13:52
 - Posted by Siva.
எனது, 10 /07 /12 அன்று 16 h 46 க்கு பதிவு செய்த விமர்சனத்தில்,<<<நீதி அமைச்சுப் பொறுப்பேற்ற திரு அஷ்ரப் அவர்கள்,>>>, என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். தவறை மன்னித்து, 'நீதி அமைச்சுப் பொறுப்பேற்ற திரு ரவூப் ஹக்கீம் அவர்கள்'...., என்று திருத்தி வாசிக்கவும். நன்றி.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.