வட மாகாணசபைத் தேர்தல்கள் வெளிப்படைத்தன்மையுடையதாகவும், மிகச் சரியானதாகவும் அமைய வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நியாயமான முறையில் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக் கூடிய சாத்தியம் ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கில் நடைபெறும் முதலாவது மாகாணசபைத் தேர்தல்மிகவும் சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை நடாத்தி குற்றச்சாட்டுக்களை சுமக்க நாம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தேர்தல்களை நடாத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களை நடாத்தத் தேவையான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்தமக்களில் 95 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், அதற்கு முன்னர் இடம்பெயர்ந்தமூன்று இன சமூகங்களையும் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களை நடாத்தத் தேவையான சூழ்நிலையைஉருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையென்றால், இடம்பெயர் மக்களின்வாக்குரிமையை அரசாங்கம் முடக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு மக்களின்ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சகல அரசியல் கட்சிகளும் நியாயமான முறையில்பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்க வேண்டியது அவசியமானது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய காலத்தில் தேர்தல்களை நடாத்துவது மிகவும்அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.