வவுனியா சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட நிமலரூபன் என்ற கைதி தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட நிமலரூபன் மற்றும்ஏனைய சிறைக் கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி அறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கைதிகள் நிலைமை பற்றி விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத்தெரிவித்துள்ளார்.
நிமலரூபன் மரணம் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஏற்கனவே இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.