மன்னார் நீதிபதியை தெலைப்பேசியில் மிரட்டிய அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் நீதிமன்ற சூழலில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் மற்றும் நாசகார நடவடிக்கைகளை கண்டித்து நாட்டின் பலபாகங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டடிருக்கின்றன.
மன்னார் நகரின் பிரதான நுழைவாயிலில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தை அன்மித்த பகுதியில் நேற்று முன்தினம் (18.07.2012) உப்புக்குளம் பகுதியைச்சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மீது கலகக்காரர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதோடு நீதி மன்றங்களின் மீதும் கல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலகம் அடுக்கும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தடியடிப்பிரயோகங்களை மேற்கொண்டு நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததோடு மன்னார் நீதிமன்றம், நகர்பகுதிகளை இராணுவத்தின் உதவியோடு தமது பூரண கட்டுப்பாட்டினுள்ளும் கொண்டுவந்திருந்தனர்.
அதேவேளை மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் அ. யூட்சன் அவர்களது வதிவிடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு நன்கு திட்டமிடப்பட்டு மேற்கோள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏவலாளிகள், சூத்திரதாரிகள், தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்யும் பொருட்டும் விசேட பொலிஸ் குழுக்கலும், தடயவியல் பொலிஸாரும் மன்னார் நகரிற்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம், நீதிமன்ற அவமதிப்பு, நீதவான் மீதான தூசிப்புக்கள் என்பவற்றிற்கு எதிராக மன்னார் சட்டத்தரணிகள், நீதிமன்ற பணியாளர்களினால் கண்டனம் தெரிவித்தும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது.
அதேவேளை நேற்;றைய தினம் மன்னார் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்றிருக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் நீதிமன்ற விவகாரங்களில் அரசியல் வாதிகளினதும், அரசியலினதும் தலையீடுகள்; என்பனவற்றை கண்டித்தும்;; கோஷங்கள். எழுப்பப்பட்டிருக்கின்றது.
இதேவேளை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பாகங்களிலுமுள்ள நீதிமன்றங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்திருக்கின்றன.
நாட்டின் வட பகுதியான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்மாவட்ட நீதிமன்றங்கள் முழுமையாக செயலிழந்திருப்;பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் நீதிமன்றங்களும், சிங்கள பகுதிகளிலில் உள்ள நீதிமன்றங்களும் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை இடை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மன்னாரில் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு வலுச்சேர்க்கும் முகமாக வவுனியாவில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலமையிலான சுமார் பத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நேரடியாக சமூகமளித்திருக்கின்றனர்.
இவர்கள் மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி மதிப்பிற்குரிய தியாகேந்திரன், மாவட்ட நீதிபதி மதிப்பிற்குரிய அ.யூட்சன் மற்றம் சட்டத்தரணிகள் ஆகியோரை நேரில் சந்தித்து தமது கவலையை தெரிவித்திருக்கின்றனர்.
மன்னாரில் நேற்றைய தினம் சுலோகங்கள் ஏந்தி இடம்பெற்றிருக்கும் சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றது.
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான், வேண்டாம் உன் அரசியல் அராஜகம்.
றிஷாட்! நீதிமின்ற கட்டளைக்கு கட்டுப்பட உன் காடையர்க்கு சொல்,
அமைச்சர் நீதிபதியா? அரசேதீர்ப்பு வழங்கு
மக்களை பிழையாக வழிநடத்தாதீர் நீதியையும், அரசியலையும் கலக்காதீர் ஒழிக உன் அரசியல் அராஜகம்
அமைச்சரே! நீதிமன்ற தீர்ப்பில் தலையிடாதே!
அமைச்சரே! ஆண்டவன் வேறு நீவேறு
அமைச்சரே நீதித்துறையை சுதந்திரமாக செயற்படவிடு
நீதிமன்றத்திற்கு எதிராக உன் காடையரை ஏவிவிடாதே
நீதித்துறை சுதந்திரமானது, கௌரவ நீதிபதியை அவமதிக்காதே, தீர்ப்பை அவமதியாதே!
போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை தாங்கியவர்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருக்கின்றனர்.