Home இந்தியா அமைச்சர்  அர்ஜுனா ரணதுங்க மீது, இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டு…

அமைச்சர்  அர்ஜுனா ரணதுங்க மீது, இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டு…

by admin

இலங்கை கிரிக்கட்ட அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அந்தப் பணிப்பெண் தனது முகநூல் பக்கத்தில் தன்னிடம் ரணதுங்கா எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார் என்பதையும், எப்போது நிகழ்ந்தது என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரைப் பாதுகாப்பு கருதி மறைத்து இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு  நட்சத்திர விடுதியில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது, இலங்கை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கத் தனது தோழிகளுடன் சென்றபோது, ரணதுங்கா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அப்போது அவர் தன்னை மிரட்டியும், தாக்கியும் தன்னை பலவந்தப்படுத்தினார். ஆனால், அங்கிருந்து தான் தப்பிச் சென்று விடுதியில் உள்ள வரவேற்பறை பணியாளர்களிடம் இந்த விவரத்தைத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பணியாளர்கள், “உன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்” என அந்தப் பெண் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு உலகக்கிண்ணத்தைப்  பெற்றுக்கொடுத்த அனித் தலைவராக அர்ஜுனா ரணதுங்கா புகழப்பட்டு வருகிறார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரணதுங்கா 5,105 ஓட்டங்களையும், 260 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,456 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More