Home இலங்கை அரசியல் நெருக்கடி – முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு :

அரசியல் நெருக்கடி – முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு :

by admin

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி முதலிய அரச ஊடக நிறுவனங்களுக்கு விசேடபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட, அரசின் முக்கிய நிறுவனங்களான சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும் வரை இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More