Home இலங்கை அரச சேவைக்குள் 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்!

அரச சேவைக்குள் 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்!

by admin

20ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4800 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் பொருட்டு அண்மையில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களையே, முதல் கட்டமாக இணைத்துக் கொள்ளப்படுவதற்கு அமைச்சரவை தீர்மானம் செய்துள்ளது.

இதேவேளை ஏனைய 15ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கான நியமனம் குறித்து இதன்போது எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவர்களை செப்டம்பர் மாதம் உள்ளீர்ப்பதாக முந்தைய அமைச்சரவை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More