Home இந்தியா இந்தியர்களின் கறுப்புப் பண விபரங்களை சுவிஸ் வங்கி இன்று ஒப்படைக்கின்றது

இந்தியர்களின் கறுப்புப் பண விபரங்களை சுவிஸ் வங்கி இன்று ஒப்படைக்கின்றது

by admin


கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இன்று சுவிஸ் வங்கி ஒப்படைக்கவுள்ளது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கோடிக்கணக்கான கறுப்புப் பணம் பதுக்கி வருகின்றனர்.

இவ்வாறு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணமும் உள்ளதால், கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியா – சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான தகவல்கள் மாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக சுவிஸ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.

அந்தவகையில் சென்ற ஆண்டில் சுவிஸ் நாட்டில் கறுப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி இன்று ஒப்படைக்க உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  #இந்தியர்  #கறுப்புப்பண  #சுவிஸ் வங்கி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More