Home இந்தியா இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

by admin


தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள்; கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில்   அவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதில்  மீனவர்களான பிச்சை மற்றும்  ஜோன்சன் ஆகியோர் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில்    ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மேற்கொண்ட  அவசர   கூட்டத்தில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என   வலியுறுத்தப்பட்டதுடன் கடலோர காவல்படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து  இன்றையதினம்  மீனவர்கள்   வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800 படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை ஓரங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2 கோடி ரூபா  இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும்  நாளை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More