Home இலங்கை இரணைதீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீது கடற்படையினா் தாக்குதல்

இரணைதீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீது கடற்படையினா் தாக்குதல்

by admin

மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நள்ளிரவு நேரம் இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிய வருகின்றது.


பள்ளிமுனை கடற்கரையில் உள்ள கடற்படையினரின் சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொண்ட பின்னா் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது நள்ளிரவு 12 மணியளவில் இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டதோடு தேவையற்ற காரணத்தை கூறி குறித்த 4 மீனவர்களையும் கூமார் 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் கடற்படையினர் அவா்களைத் தாக்கியதோடு, மீனவர்களின் தொலைபேசி மற்றும் டோச் லைட் போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பள்ளிமுனை    கடற்படை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More