Home இலங்கை இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்

இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்

by admin


இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.  இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும், அதனை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் உரையாற்றிய பெரி, இலங்கை அரசாங்கம் தமது பொறிமுறைகளின் அமுலாக்கம் குறித்த முறையான நேர அட்டவணை ஒன்றை கொண்டிருக்கவில்லை குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More