Home பிரதான செய்திகள் உபுல் தரங்க இரண்டாண்டு காலம் விளையாடாமை இழப்பாகும் – சனத் ஜயசூரிய

உபுல் தரங்க இரண்டாண்டு காலம் விளையாடாமை இழப்பாகும் – சனத் ஜயசூரிய

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


உபுல் தரங்க இரண்டாண்டு காலம் விளையாடாமை இழப்பாகும் என இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் தலைமைப் பதவியை உபுல் தரங்க வகித்து வருகின்றார்.

உபுல் தரங்கவின் கிரிக்கட் வாழ்க்கையில் இரண்டாண்டு காலம் விரயமாகியுள்ளது என தெரிவித்துள்ள  சனத் ஜயசூரிய உபுல் தரங்க சிறந்த முறையில் விளையாடி வருவதாகவும் அணி வீரர்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியினருடன் தென் ஆபிரிக்கா சென்றுள்ள சனத் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தரங்கவிடமிருந்து மேலும் திறமைகளை அவதானிக்க முடியும் எனவும் தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கூடுதலாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டது எனவும் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More