83
உள்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு கிடையாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் உள்நாட்டு சந்தைக்கு வந்த வண்ணமிருப்பதாகவும் இதனால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அரிசிக்கு நிலவி வந்த தட்டுப்பாடு கிரமமாக குறைவடைந்து செல்வதாகவும் அரசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்ணய விலையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love