Home இலங்கை ஊடக சுதந்திரத்தை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டம்!

ஊடக சுதந்திரத்தை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டம்!

by admin

சக்தி, சிரச ஊடக சுதந்திரத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டமொன்றை நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் நடத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

சிரச, சக்தி, சியத நிறுவனங்களை தாக்கியழித்த கறுப்பு வரலாறும், ஊடக நிறுவன உரிமங்களை அரசியல் நோக்கில் வழங்கிய, ரத்து செய்த வரலாறும் இந்த ஆட்சியாளருக்கு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், ஆனால், மீண்டும் இந்த வரலாறு திரும்ப முடியாது. தாம் உறுதியாக சிரச_சக்தி ஊடக சுதந்திரத்தை ஆதரித்து நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர், நாடாளுமன்றத்தில் நேற்று (07) கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதனால், சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More