Home இலங்கை ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

by admin
வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள், எனவே விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் கோரிக்கையினை முன் வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதில் முக்கியமாக இந்த ஏற்றுமதிக்கான தரச் சான்றிதழ் பெறுவதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றார்கள்.
அந்த தர சான்றிதழை பெறுவதற்காக நீண்ட தூரம் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டு தங்களுடைய தரச் சான்றிதழை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  எனவே அதனை இலகுபடுத்தி இலகுவான முறையில் தங்களுடைய ஏற்றுமதி தர சான்றிதழ் பெறுவதற்கு ஆவண செய்யுமாறு கோரினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More