Home இந்தியா கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்து கொடுத்தது என்கிறார் மோடி!

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்து கொடுத்தது என்கிறார் மோடி!

by admin

கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது.

காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் மற்றொரு விடயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டு உள்ளார்.

Eye opening and startling!

New facts reveal how Congress callously gave away #Katchatheevu.

This has angered every Indian and reaffirmed in people’s minds- we can’t ever trust Congress!

Weakening India’s unity, integrity and interests has been Congress’ way of working for…

— Narendra Modi (@narendramodi) March 31, 2024

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More