Home பிரதான செய்திகள் கத்தி குத்துக்கு இலக்கான Petra Kvitova ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்

கத்தி குத்துக்கு இலக்கான Petra Kvitova ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அண்மையில் கத்தி குத்துக்கு இலக்கான டென்னிஸ் வீராங்கனை Petra Kvitova ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. செக் குடியரசுகளைச் சேர்ந்த 26 வயதான Petra Kvitova இரண்டு தடவைகள் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திக் குத்து காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது என்ற போதிலும், ஆறு மாதங்களின் பின்னர் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள Petra Kvitova உலக டென்னிஸ் தர வரிசையில் தற்போது 11ம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More