Home இலங்கை கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

by admin

கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி காவல்துறையினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  கைப்பற்றியுள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கற்களை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடாத்தினார்கள். 

அதன் போது டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மீது கற்களை ஏற்றி மரக்குற்றிகளை மறைத்து கடத்தி செல்லப்படுவதனை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

அதனை அடுத்து டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்டுள்ள  மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More