Home இலங்கை காணாமல் போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது..

காணாமல் போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது..

by admin

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களுடன் அடுத்த வாரம் முதல் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை அவர்களிடமிருந்து பெறவும், அவர்கள் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்ப்பவை தொடர்பில் கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பதற்கு தேவையான நிர்வாக அதிகாரிகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோரல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் குறித்த அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்த பின்னர் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்திற்கு தேவையான விசாரணை அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் தினங்களில் கோரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More