Home இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான ஒரு தொகுதி நிதியை விடுவிப்பதற்கு மத்திய அரசு தீர்மானம் :

கிழக்கு மாகாண சபைக்கான ஒரு தொகுதி நிதியை விடுவிப்பதற்கு மத்திய அரசு தீர்மானம் :

by admin

கிழக்கு மாகாண சபைக்கான நிதியில் மேலும் ஒரு  தொகுதி நிதியை விடுவிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 500 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசு இணங்கியுள்ளதாக  கிழக்கு மாகாண சபையின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மாகாணத்து வழங்கப்பட வேண்டிய நிதியினை விரைவில் வழங்க  ஆவண செய்யுமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்ததனடிப்படையில்   ஜனாதிபதி கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் ஒரு தொகுதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்கு 500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 600 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More