Home இலங்கை கொலை அச்சுறுத்தல்- பிரதி காவல்துறை மா அதிபரிடம் ஊடகவியலாளா் தஞ்சம்

கொலை அச்சுறுத்தல்- பிரதி காவல்துறை மா அதிபரிடம் ஊடகவியலாளா் தஞ்சம்

by admin

ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான  கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குறித்த ஊடகவியலாளரை இலக்கு வைத்து அக்கரைப்பற்று காவல் நிலையத்தை சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரி  ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி  தொலைக்காட்சி ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளராக  கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வரும்  சஹீர் அஹமட் பாறுக்  (வயது -29) மீதே இவ்வாறு கொலை  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிரத்தியேக  வேலை ஒன்றுக்காக அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருக்கின்ற முஸ்லிம் மையவாடிக்கு முன்னால்   மோட்டார் சைக்கிளில் இரவு 8.35 பயணம் செய்த வேளை EP KF 0842 இலக்கமுடைய காரில் வந்த குறித்த உயரதிகாரி தனது(ஊடகவியலாளர்)  மோட்டார் சைக்கிளை நிறுத்தி இவ்வச்சுறுத்தலை தனக்கு விடுத்துள்ளதாக ஊடகங்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

மேலும் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்திய பின்னர்   சிவிலுடையில் குறித்த அதிகாரி தன்னை நோக்கி வந்து   கடும் கோபத்தில்  இவ்வாறு சொன்னார்.

‘‘எனக்கு எதிராக உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் உள்ள முறைப்பாடுகளை மீளப்பெறல் வேண்டும் அத்துடன் மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையை  வாபஸ் பெற வேண்டும் அப்படி இல்லாவிட்டால் உன்னை இந்த மையவாடியில் வெகுவிரைவில்  புதைப்போம்..நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்கு தெரியாதா…
வருகின்ற வாரத்துக்குள் மனித உரிமை மீறல்  வழக்கு விசாரணையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம் பிடிப்பாய் இல்லாது விட்டால் உயிருடன் புதைக்கபடுவாய்‘‘ என அச்சுறுத்தி விட்டு சென்றார்  என குறிப்பிட்டார்.

மேலும் குறித்த உயர் காவல்துறை அதிகாரி  கடந்த 02.09.2021 அன்று ஊடக கடமைக்குச் சென்ற வேளை தன்னை காவல்துறை குழு ஒன்றுடன் இணைந்து  தாக்கி காயப்படுத்தியதுடன் கமராவினையும் உடைத்துள்ளதை தன்னிடம் உள்ள வீடீயோ ஆதாரத்தில் குறிப்பிட்டுள்ளளதாகவும் .எனவே இது தொடர்பாக தனக்கு நீதி ஒன்றினை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பெற்றுத்தர வேண்டும் எனவும் தொிவித்துள்ளாா்.

மேலும் தனக்கு திருமணம் ஆகி    6 வயது ,1  வயது  குழந்தைகள் உள்ளன எனவும் அவா்  தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More