87
இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் மேற்கு பகுதியில் தற்போது கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சிலாபம், ஆணமடு மற்றும் ஆண்டிகம பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சீரற்ற காலநிலையினால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Spread the love