Home இலங்கை சூனியம் வைக்க முற்பட்டவர்கள் கைது

சூனியம் வைக்க முற்பட்டவர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்த வைப்பதற்காக மனைவியின் வீட்டில் சூனியம் வைக்க முற்பட்டவர்கள் ஊரவர்களால் பிடிக்கப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். குறித்த சம்பவம் புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

புன்னாலைக்கட்டுவான் வடக்கை சேர்ந்த கணவன் , மனைவி கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குறித்த கணவன் மனைவியுடன் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் கொண்டு வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த பில்லி சூனியம் வைக்கும் பூசாரியின் உதவியை நாடியுள்ளார்.

பூசாரி , கணவன் மனைவியை மீள இணைத்து வைப்பதாக உறுதி கொடுத்து , தான் மந்திரித்த விபூதியை மனைவி வீட்டில் தூப வேண்டும் என கூறி மனைவி வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு கணவன் , பூசாரி மற்றும் பூசாரியின் உதவியாளர் ஆகியோர் சென்று உள்ளனர்.

அவர்கள் மனைவி வீடு அமைந்துள்ள பகுதியில் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரிக்க முற்பட்ட வேளை பூசாரியின் உதவியாளர் அப்பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை துரத்தி சென்ற இளைஞர்கள் மடக்கி பிடித்து விசாரித்ததில் , மூவரும் சூனியம் வைக்க வந்த விடயத்தை அறிந்துள்ளனர்.

அதன் பின்னர் மூவரையும் பிடித்து, சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாக போலீசார் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More