Home இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி குறித்து திருப்தி அடைய முடியாது – ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன்

ஐக்கிய தேசியக் கட்சி குறித்து திருப்தி அடைய முடியாது – ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் திருப்தி அடைய முடியாது என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாம் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி என்ன செய்கின்றது என்பது பற்றி தமக்கு தெளிவில்லை எனவும் இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்துடன் விளையாடுவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் அரசியலில் பிரவேசம்?

Oct 18, 2017 @ 03:28


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் அரசியலில் பிரவேசிக்க உள்ளார்.
பிரதீப் ஜயவர்தன அரசியலில் பிரவேசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் தமது இந்த தீர்மானம் தொடர்பில் ஊடகங்களில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.ஆர். ஜயவர்தனவின் குடும்பத்தில் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More