Home இலங்கை ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் இலங்கை செல்லவுள்ளார்

ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் இலங்கை செல்லவுள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் ( Pablo De Greiff  ) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் பத்தாம் திகதி இலங்கைக்கு  செல்லும் அவர் இலங்கையில்   இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டு  முன்னேற்றங்களை  குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற  மோதல்கள் காரணமாக  கடந்த காலங்களில் இடம்பெற்ற  மனித உரிமை மீறல்கள்   மற்றும் துஸ்பிரயோகங்கள் உட்பட்ட விடயங்களிற்கு தீர்வு காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் திகதி இலங்கை வரும் அவர்    23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் அக்காலப்பகுதியில்  இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூகத்தினடருடன்  குறித்த விடயங்கள் குறித்து கலந்தரையாடவுள்ளதாகவும் அவரது மதிப்பீடுகள் குறித்து  ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More