Home உலகம் டிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலி

டிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலி

by admin


டிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். டிஆர் கொங்கோவின் வடமேற்குப் பகுதியில் மொம்போயா ஆற்றில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மொன்கோட்டோ நகரில் இருந்து எம்பன்டாகா நகரை நோக்கி பெருமளவு பொருட்கள் மற்றும் பயணிகளுடன் சென்ற குறித்த படகு திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் வியாழக்கிழமை 49 உடல்களும் வெள்ளிக்கிழமை ஓர் உடலும் மீட்கப்பட்டுள்ளன.

படகு மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை. எனவும் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பதும் உறுதி செய்யப்படவில்லை எனவும் அம்மாகண துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். அங்கு மீட்புக் குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரவில் படகுப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் சட்டவிரோதமாக இரவில் படகுப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பழைய படகுகளைப் பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றுவது, பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாதது போன்ற காரணமாக டி.ஆர். கொங்கோவில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More