Home இலங்கை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதனை மறுக்க முடியாது – ஆரியதாஸ குரே

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதனை மறுக்க முடியாது – ஆரியதாஸ குரே

by admin

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதனை மறுக்க முடியாது என தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க காவல்துறை தலைமையகத்துக்கு கடப்பாடு உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை செய்திகளை மின்னஞ்சல் ஊடாக தனியார் ஊடகங்களுக்கு தினசரி வழங்குவது நிறுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் அண்மையில் அறிவித்திருந்ததற்கமைய அரசாங்க ஊடகங்களுக்கு மட்டும் தினசரி செய்திகளை வழங்க காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் காவல்துறை தலைமையகமானது செய்திகளை வழங்க வேண்டும் என தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே, தெரிவித்துள்ளார். இதேவேளை, காவல்துறை மா அதிபரின் இந்த நடவடிக்கை குறித்து இது வரையில் எவரும் எழுத்து மூலம் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More