Home இலங்கை தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 16 குடும்பங்கள்,  இலங்கை திரும்பவுள்ளனர்….

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 16 குடும்பங்கள்,  இலங்கை திரும்பவுள்ளனர்….

by admin


அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில், 16 குடும்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.

சுயவிருப்பின் பேரில், 16 குடும்பங்களைக் சேர்ந்த 34 பேர் எயர்லங்காவின் இரு விமானங்கள் மூலம் இலங்கைக்கு திரும்பவுள்ளனர். இவர்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களென, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வாளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாயும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 2,500 ரூபாயும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாயும், குடும்பத்துக்கு 10,000 ரூபாயும், அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.

மேலும், மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாயும், தற்காலிக கொட்டகைகளுக்காக 25,000 ரூபாயும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாயும், காணி துப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறதென அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 100,000 அகதிகள் இந்தியாவில் தற்போது உள்ளனரெனவும், அவர்களில் 65,000 பேர் அகதி முகாம்களிலும், 35,000 பேர் வெளியிடங்களிலும் வாழ்ந்து வருகின்றனரென மதிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More