Home இலங்கை திருகோணமலை எண்ணெய்த் தாங்கி உடன்படிக்கை பற்றி மஹிந்த அம்பலப்படுத்த வேண்டும் – சம்பிக்க

திருகோணமலை எண்ணெய்த் தாங்கி உடன்படிக்கை பற்றி மஹிந்த அம்பலப்படுத்த வேண்டும் – சம்பிக்க

by admin


திருகோணமலை எண்ணெய்த் தாங்கி உடன்படிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அம்பலப்படுத்த வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டில் திறைசேரியின் அப்போதைய செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை மஹிந்த இந்தியாவிற்கு அனுப்பி இந்த உடன்படிக்கை குறித்து பேசியதாகத் தெரிவித்துள்ள அவர் தற்போதைய அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் எவ்வித விடயங்களையும் புதிதாக பேசவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2002ம் ஆண்டில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியதற்கு அமைய தற்போது கூட்டு உடன்படிக்கையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொடர்பில் குற்றம் சுமத்தி வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே, இந்த உடன்படிக்கை தொடர்பில் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரைவயின் அனுமதி இன்றியே திறைசேரியின் செயலாளர் இந்தியாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More