Home இலங்கை தீர்வை வழங்க அரசாங்கம் மறுத்தால், தமிழ் மக்கள் தமக்கான தீர்வை செயற்படுத்துவார்கள்…

தீர்வை வழங்க அரசாங்கம் மறுத்தால், தமிழ் மக்கள் தமக்கான தீர்வை செயற்படுத்துவார்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ் மக்கள் தமக்கான தீர்வை செயற்படுத்துவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் அது சுயாட்சியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளதாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளரான டி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இனப்பிரச்சினை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு கூடியளவில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் நாட்டில் உள்ள தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை வழங்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை – இந்திய உடன்படிக்கை கொண்டு வந்ததுடன் அதனையும் புறந்தள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். (திவயின)

Spread the love
 
 
      

Related News

1 comment

Gabriel Anton April 29, 2018 - 2:35 pm

SL Tamils do not want to live like a second class citizens in their own country. Equal rights should be granted to the Tamils. Otherwise they have live separately in their own country. That is Tamil Eelam.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More