Home இலங்கை நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

by admin

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதன் மூலம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தி; ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பிரதமர் பதவியில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளையும் Nமுற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கான சந்தர்ப்பத்தினை தடுக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More