Home உலகம் நீதிமன்றம் பக்கச்சார்பானது – 2015 பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்

நீதிமன்றம் பக்கச்சார்பானது – 2015 பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2015ம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நீதிமன்றம் பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சந்தேக நபரான சலா அப்டேசலம் ( Salah Abdeslam )என்பவரே இவ்வாறு நீதிமன்றில் எதனையும் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெல்ஜிய நீதிமன்றில் சலா அப்டேசலமுக்கு எதிரான வழக்கு விசாரணைக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தாம் நீதிமன்றில் நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தமது மௌனம் தாம் குற்றவாளி என்பதாக அர்த்தப்படாது எனவும், நீதிமன்றில் எதனைப் பேசினாலும் அதில் பயனில்லை என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லிம்கள் மிகவும் கடுமையாக நடத்தப்படுவதாகவும் இரக்கமின்றி துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் நீதிபதிக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ அஞ்சப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

People wait outside next to Belgian policemen standing guard at the entrance of the “Palais de Justice” courthouse in Brussels, on February 5, 2018 for the opening of the trial of prime suspect in the November 2015 Paris attacks Salah Abdeslam. The trial opens on February 5, 2018 of Paris attacks suspect Salah Abdeslam over a shootout in Brussels that led to his capture. / AFP / Emmanuel DUNAND

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More