Home இலங்கை பகடி வதை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகடி வதை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடி வதை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 15 பேரின் விளக்கமறியல்  நீடிக்கப்பட்டுள்ளது.  குறித்த மாணவர்கள் நேற்றையதினம் கண்டி பிரதான  நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட போதே நீவதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

விவசாயபீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் எட்டுப்பேரை, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் அழைத்துச்சென்று, நிர்வாணமாக்கி, மனிதாபிமானமற்ற முறையில், பகடி வதைக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதே பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவர்கள் 15பேர் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் வித்தியாசமான சத்தங்கள் கேட்பதையிட்டு சந்தேகம் கொண்ட கிராமமக்கள்   காவல்துறையினரின் கவனத்துக் கொண்டு வந்ததனைத் தொடர்ந்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More