Home இந்தியா பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

by admin

 
தேரா சச்சாசவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங்  பாலியல் துஸ்பிரயோக  வழக்கில் கலவரம் வெடிக்கும் என தெரிந்தும் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று அறிவித்தனையடுத்து ஏற்பட்ட கலவரத்தினால்    பஞ்சாப், அரியானா மாநிலங்களில்   பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையிலேயே  பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  கலவரம் வெடிக்கும் என தெரிந்தும் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும்  கலவரத்தை முன்கூட்டியே ஏன் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்    குர்மீத்தின்  சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்  கலவரத்தில் உயிர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த சொத்துகளை விற்று நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இரு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More