Home இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிடியில் திலும் அமுனுகம….

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிடியில் திலும் அமுனுகம….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….


கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்த உள்ளனர். எதிர்வரும் 10ம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு திலும் அமுனுகமவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இனக் குரோத அடிப்படையில் மரண வீடொன்றில் வைத்து திலும் அமுனுகம உரையாற்றியிருந்த காட்சிகள் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியிடப்பட்டிருந்தது. கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் திலும் அமுனுகமவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் திலும் அமுனுகவிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்யும் நோக்கில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More