Home இலங்கை பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை – சிக்கலில் இலங்கை என்றிகது JVP!

பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை – சிக்கலில் இலங்கை என்றிகது JVP!

by admin

அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு முன்னர் அதிகாரிகள் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்திருக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், பயணத்தை ஒத்திவைக்கக் கோர வேண்டிய அவசியம் அரசாங்கதிற்கு இருந்திருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து, வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் சீன அதிகாரிகளிடம் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கோரியுள்ள நிலையில் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளதுடன், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்த முடிவில் மாற்றமில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More