Home இலங்கை பிரபல பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில் மோதல்

பிரபல பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில் மோதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கொழும்பின் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவங்கள்  காரணமாக  ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு இடையிலேயே இந்த  மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் காரணமாக  சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்திலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More